எந்த பனித்துளிக்குள்
ஒளிந்துகிடக்கிறது……
என் கவிதை.
நிலவை படம்பிடிக்க
முடியாத வருத்தத்தில்……
வற்றியகுளம்.
தெளிந்தநீரில்
முகம்பார்த்தபிறகும்……
தெளியாத மனசு.
பாவலர்கள் எழுதிவிடுவார்களோ
பயந்துமுட்புதரில் மறையும்……
நிலவு.
நிசப்தமாய் இரு
இசை கேட்கலாம்……
மழை வரப்போகிறது.
தரிசுநிலக்காட்டில்
தவறி விழுந்த காகிதத்தில்……
அ றுவ டைக்கால கவிதைகள்
ஆயிரம்பேர் அழைத்தலும்
ஆகாயத்தில் தான்……
நிலவு.
பச்சைபசேலென
அடர்ந்த மரக்காட்டில்……
கோடாளிச்சத்தம்
அழகிய வண்ணத்துபூச்சி
பறக்கும் திசையெல்லாம்……
உடன் பறக்கும்மனசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக